×

பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கைது

போடி, ஜூலை 16: போடி நகர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ அழகர்ராஜா நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பழைய பஸ்நிலையம் வஉசி சிலை அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது வாகனத்தில் அரிவாள், சுருள்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள், மதுரை அருகே உள்ள சமயநல்லூர் கோடனேரி பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த வீரய்யா(49), கணேசன்(24), மதுரை வாடிப்பட்டி தனிச்சியம் ஜெகன் (30), சோழவந்தான் அருகே திருவேடகத்தை சேர்ந்த ரேவந்த் (24), நாகமணி (29), குமரவேல்(27) எனத் தெரிய வந்தது. மதுரையில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் போடிக்கு அவர்கள் எதற்கு வந்தார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...