×

காரைக்குடியில் மனநலம் பாதித்த வாலிபர் தற்கொலை

காரைக்குடி. ஜூலை 16: காரைக்குடி கழனிவாசல் சிறுவயல் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (53). இவரது வீட்டில் இவரது உறவுக்காரரான பூலாங்குறிச்சி சேர்ந்த ராமன் மகன் சதீஷ்குமார் (28) பத்து ஆண்டுகளுக்கு மேலாக தங்கி பேட்டரி கடையில் வேலை செய்து வந்தார்.
 இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சதீஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூலாங்குறிச்சி திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு சதீஸ்குமார் தனது தாய் மெய்யாத்தாலுடன் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வேலைக்கு செல்லாமல் கோழக்கண்மாய் அருகே குருணை மருந்தை சாப்பிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரை பல இடங்களில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி  தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...