மேலூர் அருகே சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மேலூர், ஜூலை 16: மேலூர் அருகே தும்பைபட்டி சிவாலயபுரத்தில் உள்ளது சங்கரலிங்கம், சங்கரநாராயண சுவாமி, கோமதியம்மாள் கோயில். இங்கு நேற்று ஆனி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், மக்களின் நோயற்ற வாழ்வு வேண்டியும், அமைதி தழைத்தோங்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி திரவியம், மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிஷேகங்கள் நடைபெற்றன. சிவபுராணம், கோளறு பதிகம், நந்தி தேவர் கவசம் பாராயணம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ரமேஷ் குருக்கள் மற்றும் சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: