திருநங்கைக்கு வெட்டு

உடன்குடி, ஜூலை 16:  உடன்குடி பஸ் நிலைய பகுதியில், நேற்று மாலை திருநங்கைகள் வசூலில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த திருநங்கைகளுக்கும், இவர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரு திருநங்கை கழுத்தில் வெட்டினர். இதில் அலறி துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில், வெட்டுபட்டவர் நாங்குநேரி வடக்கு கும்பிகுலத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் சங்கர் என்கிற அம்பிகா (23) என்பது தெரிய வந்தது.  மேலும் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கைகள் பாண்டிச்செல்வி (19), மைனா (16), தேன்மொழி (19), இந்துஜா (19) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: