லோடு ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது+

உடன்குடி,  ஜூலை 16: திருச்செந்தூர் அருகே காயாமொழியை சேர்ந்தவர் ராமசாமி மகன்  பத்மநாபன். இவர், உடன்குடியில் பால் விற்பனை நிலையம் நடத்தி  வருகிறார். இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவை கடை ஊழியரான  உடன்குடி பூலத்தெருவை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தனது வீட்டினருகே  நிறுத்துவது வழக்கம்.  சம்பவத்தன்று நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்த  பேட்டரி மாயமானது.

இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் மேலதாழையூத்து இபி தெருவைச்  சேர்ந்த குணசேகரன் மகன் ராஜ்குமார்(19) என்பவர் திருட்டில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம்  இருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: