குரும்பூர் அருகே குளத்துக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

உடன்குடி, ஜூலை 16: குரும்பூர் அருகே குளத்துக்குள் அழுகிய நிலையில் முதியவர் சடலம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குரும்பூர் அருகே உள்ள நல்லூர் மேலக்குளத்தின் நடுவில், புதரில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக நல்லூர் விஏஓ சுமித்ராவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் குரும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடியில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடல் ஆய்வு செய்யப்பட்டது. சடலமாக கிடந்தவர் இறந்து 15 நாட்கள் இருக்கலாம் என்பதால் அழுகிய நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து கிடந்தவர்  யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டரா? அல்லது நோய் வாய்பட்டு இறந்தாரா? என்பது குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: