×

சிக்கியது கண்ணாடி விரியன்

போடி, ஜூலை 16: போடியில் விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த 7 அடி கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.
போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(50). விவசாயி. இவரது வீட்டில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்ட அவர், உடனடியாக
போடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 1 மணி நேரம் போராடி வீட்டின் விட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீள பாம்பை பிடித்தனர். கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்த பாம்பை, அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...