குஜிலியம்பாறை, ஜூலை 16: குடிபோதையில் டூவீலரில் வந்த வாலிபர் நிலைதடுமாறி வறட்டாறு ஓடையில் தவறி விழுந்து பலியானார்.குஜிலியம்பாறை அருகே கிழக்கு ராமகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(37) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குஜிலியம்பாறை போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் டூவீலர் ஓட்டி வந்த சக்திவேலுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அபராத தொகையை கட்டி வண்டியை எடுத்து சென்ற சக்திவேல் இரவு வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு நேரம் முழுவதும் வீடு திரும்பாத சக்திவேலை காணவில்லை என அவரது மனைவி அம்சவள்ளி(35) நேற்று காலை குஜிலியம்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.