×

காரிமங்கலம் அருகே பச்சியம்மன் கோயில் தேர்த்திருவிழா

காரிமங்கலம், ஜூலை 16:  காரிமங்கலம் அருகே பச்சியம்மன் கோயிலில் நடந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பச்சியம்மன் கோயில், தேர்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 11ம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மதியம் 1.30 மணியளவில் அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முனீஸ்வரன் சுவாமிக்கு கும்ப பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை கெரகோடஅள்ளி, கோனகவுண்டனூர், கீழுர், சொரக்கானூர் கிராமங்களின் ஊர் கவுண்டர்கள் விழாக்கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா