×

திருமணத்திற்கு சென்ற பெண் மாயம்

தர்மபுரி, ஜூலை 16: காரிமங்கலம் மல்லிக்குட்டை அடுத்த ராமியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது(45). இவர், அதே பகுதியில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சொசைட்டியில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள்(40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி, தர்மபுரி குள்ளனூரில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்ற முனியம்மாள், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாது, பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நேற்று முன்தினம் மாது அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா