×

ஜம்மணஅள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

அரூர், ஜூலை 16: அரூர் ஒன்றியம் ஜம்மணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்முருகன் வரவேற்றார். அரூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை வகித்தார். அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் கலந்து கொண்டு,  மாணவர்களுக்கு இலவச ேலப்டாப் வழங்கி ேபசினார். இதில் மாவட்ட வழக்கறிஞர் பசுபதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கட்ராமன், பெரியதம்பி, அறிவழகன், செண்பகம், சந்தோஷம், சாமிகண்ணு, வேலு, சம்பத்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா