×

நர்சிங் மாணவி கடத்தல் 2 வாலிபர்கள் மீது புகார்

கிருஷ்ணகிரி, ஜூலை 16:  காவேரிப்பட்டணம் அருகே சவுலூர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். தர்மபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சின்னசாமி மகன் சந்திரன்(33) மற்றும் பச்சயப்பன் மகன் மணிகண்டன் ஆகியோர் அந்த மாணவியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியன் தந்தை கொடுத்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்