×

மகளின் காதல் கணவனை கத்தியால் குத்திய விவசாயி

வேப்பனஹள்ளி, ஜூலை 16:  வேப்பனஹள்ளி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை, கத்தியால் குத்திய மாமனார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே, தரணிசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சேட்டு(25). இவர், குரியனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன்(53) மகள் அருணா(26) என்பவரை, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு நாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் மகள் சேட்டுவுடன் தரணிசந்திரம் கிராமத்தில் குடும்பம் நடத்தி வருகிறர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை தரணிசந்திரம் சென்ற நாராயணன், சேட்டுவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை கத்தியால் குத்தினார். இதில், கையில் படுகாயமடைந்த சேட்டு வலியால் அலறி துடித்தார். இதைக் கண்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், டிஎஸ்பி பாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார். இதையடுத்து, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்