×

திருச்செங்கோடு 1வது வார்டில் சாலையில் தேங்கிய கழிவுநீர்

திருச்செங்கோடு, ஜூலை 16:திருச்செங்கோடு நகராட்சி 1வது வார்டு கருப்பன்காடு பகுதியில், மழைநீருடன் கலந்த கழிவுநீர் சாலையில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகராட்சி 1வது வார்டு சீதாராம்பாளையம்-மாங்குட்டைபாளையம் சாலையில் உள்ள  கருப்பன்காடு பகுதியில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர், சாலையோரம் உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ளது. அதில் குப்பைகளும் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும்,  சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, சாலையில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, கருப்பன்காடு பகுதியில் தார்சாலை மற்றும் சாக்கடை வசதியை செய்து தர, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது