ராசிபுரம், ஜூலை 16: ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளியின் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். கல்வி இயக்குனர் சுப்ரமணியன், முதல்வர் ஸ்தனிஸ்லாஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைவர் சிதம்பரம், காமராஜரின் மதிய உணவு திட்டம் குறித்தும், அவர்களது ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள், கல்வி வளர்சசி குறித்தும், எடுத்துரைத்தார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.