கூட்டு பண்ணையம் பயிற்சி முகாம்

சேத்தியாத்தோப்பு, ஜூலை 16: சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் வேளாண்மை வட்டாரம் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கூட்டுப்பண்ணை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் விற்பனை துறை அலுவலர் ராமச்சந்திரன், விவசாயிகள் ஆர்வலர் குழு அமைத்தல் குறித்தும், உழவர் உற்பத்தியாளர் குழு உருவாக்குதல் பற்றியும் விளக்கி பேசினார். கீரப்பாளையம் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் நீலகண்டன் இப்பயிற்சியின் பயன் குறித்து எடுத்துரைத்தார்.

Related Stories: