வாலிபருக்கு மிரட்டல் தம்பதி மீது வழக்கு

சின்னசேலம், ஜூலை 16:   குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னசேலம் அருகே மூங்கில்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கபில்தேவ்(34). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ராஜா(37), அவரது மனைவி கவிதா(29) ஆகியோருக்கும் குடிநீர் பிடிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மதியம் கபில்தேவ் பொது பைப்பிற்கு குடிநீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது ராஜா இங்கே ஏன் தண்ணி எடுக்க வர்ற என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜாவும், அவரது மனைவியும் சேர்ந்து கபில்தேவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் தலையில் காயமடைந்த கபில்தேவ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கபில்தேவ் அளித்த புகாரின் பேரில் ராஜா, அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: