×

விஷம் குடித்து ஒருவர் சாவு

விக்கிரவாண்டி, ஜூலை 16:
விக்கிரவாண்டி அடுத்த வீடூர் ஆனந்தம் பேட்டையை சேர்ந்தவர் சடையாண்டி மகன் ஏழுமலை(42). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்த அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை