மணல் கடத்திய தந்தை, மகனுக்கு வலை

திருக்கோவிலூர், ஜூலை 16: திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரடாபட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (52), அவரது மகன் அருள்ராஜ் (21) ஆகிய இருவரும் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் இருவரும், டிராக்டரை அங்கேயே விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய தந்தை, மகனை தேடி வருகின்றனர்.  

Related Stories: