×

பெண்ணாடம் அருகே 5 ஆண்டுகளாக திறக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம்

பெண்ணாடம், ஜூலை 16: பெண்ணாடம் அருகே பாசிகுளம் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளதுபெண்ணாடம் அடுத்துள்ள பாசிகுளம் ஊராட்சியில் ஒருங்கினைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை செல்லும் அவலநிலை உள்ளது.இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பிறகும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்