×

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர், ஜூலை 16: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் வருகிற 19ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதுதொடர்பாக ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கையாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் தங்களது பெயர் மற்றும் கோரிக்கைகளையும், கோரிக்கை வைக்க உள்ள துறையின் பெயர் ஆகியவற்றையும் 19ம்தேதி காலை 8 மணி முதல் 10.15 மணிக்குள்  பதிவு செய்து கொள்ள வேண்டும்.  விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.  விவசாயிகளின்  குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு  சம்பந்தப்பட்ட துறை  அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியரால் அறிவுறுத்தப்படும்.

Tags :
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...