×

மரம் வெட்டும் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

புவனகிரி, ஜூலை 16: பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்த அப்பெண் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி சிங்காரவேலன் (28) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டு, திருப்பூரில் தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார், அவர்கள் 2 பேரையும் பரங்கிப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மைனர் பெண்ணை சிங்காரவேலன் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றி பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட மைனர் பெண்ணை கடலூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...