×

மக்கள் நீதிமன்றத்தால் அதிக வழக்குகள் தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது

கடலூர், ஜூலை 16: கடலூர் மாவட்ட நீதிமன்ற மன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பில் வழக்குகள் தீர்வு காணும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மக்கள் நீதி மன்றத்தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி பேசியதாவது:கடலூர் மாவட்ட நீதித்துறை மூலம் மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்வு காணப்பட்டு வருகிறது. நீதித்துறை மற்றும் காவல்துறை மூலம் பொதுமக்களுடைய வழக்குகள் தீர்வு காணப்படுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்து வருகின்றன. மக்கள் நீதிமன்றத்தால் அதிக வழக்குகள் தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறது என்றார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு