வேளச்சேரி, ஜூலை 16: வீட்டின் முன் நின்றிருந்த கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டான். வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளையம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எழில் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (42). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நின்றிருந்தபோது அங்கு வந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் திடீரென நாகராஜ் தலையில் சரமாரி தாக்கிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக நேற்று மதியம் இருந்தார். இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:நாகராஜும், அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி தேவர் என்பவரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் நாகராஜும், செல்லப்பாண்டி தேவரும் மது அருந்தினர். அப்போது, செல்லபாண்டி போதை மயக்கத்தில் வீட்டு படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்து இறந்தார்.