×

சரியான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க மனு

திருவள்ளூர், ஜூலை16:  திருநின்றவூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜெ. அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் சுமார் 50 பேர் திருவள்ளூர் கலெக்டரிடம் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: திருநின்றவூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 9 ல் அமுதம் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த அமுதம் ரேஷன் கடையில் பொதுமக்கள் மாதா, மாதம் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த அமுதம் ரேஷன் கடையில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்களின் அளவு குறைத்து வழங்கப்படுகிறது. மேலும் சில பொருட்கள் வழங்கப்படாமல் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே எங்களது கோரிக்கை மனு மீது தாங்கள் உரிய விசாரணை நடத்தி பொது மக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை  எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர் இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...