மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

பட்டுக்கோட்டை, ஜூலை 16: பட்டுக்கோட்டை வட்டாரத்தில் ஏனாதி, பாளமுத்தி, வேப்பங்காடு ஆகிய கிராமங்களில் மக்காசோள பயிரை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் படைப்புழுவினை கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்காசோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரி–்யர் மதிராஜன் கலந்து கொண்டு மக்காசோளப்பயிரில் பெரும் அழிவை ஏற்படுத்தும் படைப்புழுவின் வாழ்க்கை சரிதம், படைப்புழுவின் தாக்குதல் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் உழவியல் முறை, கைவினை முறை, ரசாயன முறைகளில் கட்டுப்படுத்துவது, விஷ உணவு பொறி வைத்து கட்டுப்படுத்துவது குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.முகாமில் தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) மதியரசன் கலந்து கொண்டு, விதைப்பு முதல் அறுவடைக்காலம் வரை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து படைப்புழுவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். அதன்படி கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழித்தல், விதை நேர்த்தி செய்து எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்ளுதல், அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்பு பணியை மேற்கொள்ளுதல் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை எடுத்துக் கூறினார்.

முகாமில் கலந்து கொண்ட தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சாருமதி, உயிர் எதிர் பூஞ்சாணக்கொல்லி பிவேரியா பேசியானா விதை நேர்த்தி செய்தும், மெட்டாரைசியம் அனிசோபிலியே தெளிப்பு செய்தும் படைப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். மேலும் இயற்கை சூழல் முறையில் வரப்பு பயிர்களாக சூரியகாந்தி, சாமந்தி, தட்டைப்பயிறும் மக்காச்சோளத்தில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயிறு மற்றும் தட்டைப்பயிரினை பயிரிட்டு கட்டுப்படுத்தலாம் எனக் கூறினார்.முகாமில் கலந்து கொண்ட பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா தலைமையில் வேளாண் உதவி அலுவலர்கள், விதை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட களப்பணியாளர்கள் மூலமாக குழுவாக பிரிந்து பயிரின் பல்வேறு நிலைகளின் உள்ள மக்காசோளப்பயிரை தாக்கும் படைப்புழுக் குறித்து கண்காணிப்பு மேற்கொண்டு சேத விவரம் கணக்கிடப்பட்டு சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு அதன் விவரம் எடுத்துக்கூறி தகுந்த பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த விளக்கிக் கூறப்பட்டது.

Related Stories: