×

சீர்காழியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்



சீர்காழி, ஜூலை16: சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், மாதானம், அரசூர், காளி, மடவாமேடு, வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில், ஆக்கூர், பூம்புகார், தரங்கம்பாடி, கிடாரங்கொண்டான், திருவெண்காடு, திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சீர்காழி கோட்ட அலுவலகத்தில் நாகை மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் 17ம் தேதி காலை 11.30  மணி அளவில் நடைபெறும். மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது