×

தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல் நாகை மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை, ஜூலை16: மயிலாடுதுறை காமராஜர் பிறந்தநாள்விழா நடைபெற்றது. காலையில் மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் பவுல்ராஜ் தலைமையில் ஊர்வலமாகச்சென்று கூறைநாடு பகுதியில் உள்ள காமரஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மயிலாடுதுறை முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் தலைமையில் கூறைநாடு பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, காமராஜர் மாளிகை முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானாம் கிராமத்தில் காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் கடவாசல் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாதானம் கடைவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.வேதாரண்யம்: வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே காமராஜரின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்திய காங்கரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்பி ராஜேந்திரன் நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கஜா புயலால் இறந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலா ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டது.


Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது