×

நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 5 குற்றவாளிகள் கைது

நாகை,ஜூலை16: நாகை மாவட்டத்தில் குற்றப்பதிவேடு குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எஸ்பி ராஜசேகரன் உத்தரவின்பேரில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க அதிரடியாக ஆய்வுகள் நடத்தப்பட்டது.இதில் மயிலாடுதுறை தீப்பாய்தாள்கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(33), நகர் புதுத்தெருவைச் சேர்ந்த பிரகாஷ்(34), கொள்ளிடம் தோப்புத் தெருவைச் சேர்ந்த வினோத்(36), சீர்காழி அருகே எடமணல் பெரியத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(35), நாகை அக்கரைகுளம் வடக்கு வீதியை சேர்ந்த கமல்நாத்(25) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நாகை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றப்பதிவேடு பட்டியலில் உள்ள குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது