×

பெரியகுளம் மறுகாலில் அடைப்பு இறச்சகுளத்தில் ஊருக்குள் புகுந்த தண்ணீர்

பூதப்பாண்டி, ஜூலை 16: பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் பெரிய குளத்திற்கு பாசனத்திற்காக பூதப்பாண்டியிலுள்ள பழையாற்று செக்டேமிலிருந்து அரசியர் கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ேநற்று பிற்பகல் 3மணி அளவில் இறச்சகுளம் ஜீவா நகரில் திடீரென வெள்ளம் பெருகியது. இதனால் பதட்டமடைந்த மக்கள் பொதுப்பணித்துறை தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலர் இங்கர்சால் தலைமையிலான ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து எங்கிருந்து நீர் வந்தது என பார்வையிட்டனர். அப்போது குளத்து மறுகால் பாலத்தில் பாசிகள் அடைப்பால் நீர் ஊருக்குள் புகுந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாசிகளை அகற்றி ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags :
× RELATED கொல்லம் அருகே பரிதாபம் குட்டையில்...