×

மணவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கைக்கு பிறகு பதிவேடுகள் திருத்தம் கலெக்டரிடம் புகார்

நாகர்கோவில், ஜூலை 16: மணவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களான பத்மதாஸ், தங்கப்பன், சிவதாணுலிங்கம் உள்ளிட்டோர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:  மணவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 6ம் தேதி மகாசபை கூட்டம் நடந்தது. அப்போது செயலாளரால் படிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் தணிக்கை செய்யப்பட்டு தணிக்கை அதிகாரியால் கையொப்பமிட்ட பின்பு வங்கி செயலாளரால் தணிக்கை அறிக்கையில் அழித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரிய வருகிறது.

இதற்கு விளக்கம் கேட்டபோது, தணிக்கையாளர் தான் திருத்தம் செய்து எழுதியதாகவும், நாங்கள் திருத்தம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறி கூட்டத்தை நடத்தாமல் முடக்கிவிட்டு ஆவணங்களை கொண்டு சென்றுவிட்டனர். எனவே மணவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் வரவு செலவு ஆவணங்களையும், திருத்தம் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் மகாசபை கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்