சாலை விபத்தில் 2 பேர் பலி

கோவை, ஜூலை12: கோவை கைகோலம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் ரங்கன்(70). இவர் நேற்று முன்தினம் காளப்பட்டி-தென்னம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பால் வேன் எதிர்பாராத விதமாக ரங்கன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரங்கனை மீட்டு அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.  கோவை ஜி.என்.மில்ஸ் வெள்ளக்கிணறு பிரிவை சேர்ந்தவர் தர்மராஜ்(47). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை டவுன் பஸ் நிலையம் நஞ்சப்பா ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார்.

Related Stories: