ஈரோடு, ஜூலை 12:கடத்தூர் அடுத்துள்ள காசிபாளையம் மணியகாரன்பாளையம் பிரிவு அருகே மது விற்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு மது விற்ற மணியக்காரன்பாளையம் ரங்கசாமி மனைவி ஆரியம்மா (71) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.