கோபி, ஜூலை 12: தொடர் நடவடிக்கையால் விபத்து, குற்றச்சம்பவம் குறைந்துள்ளதாக ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்தார்.
காவல்துறையில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் 25 பேர் கோபி காவல் துணை கோட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களது பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொடர் நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது. கொள்ளை, திருட்டை தடுக்க இரவு ரோந்துபணியில் 136 பீட் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.