பூலாம்பட்டி அருகே முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

இடைப்பாடி, ஜூலை 12: இடைப்பாடி அருகே, முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி சென்னிமலையானூர் தோட்டக்காட்டுவலவு பகுதியில் உள்ள செல்வசக்தி விநாயகர், மகா முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலம் வந்து கோயிலை அடைந்தனர். நேற்று காலை யாகம் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் செல்வசக்தி விநாயகர் கோயில் கலசத்திற்கும், பின்பு மகாமுனிக்கும், பரிகார தெய்வங்கள், கன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், இலவசமாக  மரக்கன்றுகள், செடிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: