இடைப்பாடி, ஜூலை 12: இடைப்பாடி அருகே இருதரப்பு மோதல் அபாயத்தால், மாரியம்மன் கோயில் திருவிழா நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
இடைப்பாடி அருகே, வெள்ளரிவெள்ளி ஊராட்சி வேட்டுவப்பட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் வைத்து இன்று(12ம் தேதி) திருவிழா நடத்தலாம் என ஊர்கவுண்டர் மணி தெரிவித்தார். ஆனால், இதற்கு பூசாரி அர்த்தனாரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கேசவன் தலைமையில், பூசாரி மற்றும் ஊர்கவுண்டர் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது.