மின் இணைப்புகளில் முறைகேடு ₹1 லட்சம் அபராதம் வசூல்

சேலம், ஜூலை 12: சேலம் மேற்கு ோட்டம், சிவதாபுரம் மின்பிரிவு கட்டுபாட்டில் உள்ள மின் இணைப்புகளில் சோதனை நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தலைமையில் நான்கு உதவி செயற்பொறியாளர்கள், 16 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். தொழிற்சாலை, வீடு, கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், வீட்டு இணைப்பை கடைக்கு பயன்படுத்தியது, தற்காலிக இணைப்பு பெறாமல் குடியிருப்பு கட்டுதல் போன்ற முறைகேடுகள் 6 இணைப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டு, ₹1 லட்சத்து ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Related Stories: