ஆத்தூர் கோட்டாட்சியர் பதவியேற்பு

ஆத்தூர், ஜூலை 12: ஆத்தூர் வருவாய் கோட்டாச்சியராக பணியாற்றி வந்த அபுல்காசிம் இடமாறுதலில் சென்றதால், புதிய கோட்டாட்சியராக நாமக்கல் சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியராக இருந்த துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று அவர் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அவரை ஊழியர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: