சேலம், ஜூலை12: சேலத்தை அடுத்த இடைப்பாடி கல்வடங்கம் காவிரியாற்றின் மையப்பகுதியின் ஆபத்தை உணராமல் மக்கள் குளியல் போடுவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரியாறு பகுதி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு பரிகாரங்கள் செய்யவும், தங்கள் ஊரில் உள்ள கோயில் விழாக்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லவும் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்கள் ஆற்றின் மையப்பகுதி வரை ெசல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீரின் ேவகம் குறைவாகவே உள்ளது. ஆனால் மையப்பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளது. இதை உணராமல் இளைஞர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு ெசல்கின்றனர். இதேபோல் பலர், மது அருந்திக் கொண்டும் ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்று கரையில் இருப்பவர்கள் கலங்கி நிற்கின்றனர்.