மேட்டூரில் தொழிலாளி கொலை குறித்து எஸ்பி விசாரணை

மேட்டூர், ஜூலை 12:  மேட்டூரில் கூலி ெதாழிலாளி கொலை சம்பவம் குறித்து துப்பு கிடைக்காத நிலையில், மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.மேட்டூர் அருகே கடந்த 5ம் தேதி கூலி தொழிலாளி தலையில், கூரிய கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்து ஒரு வாரமாகியும், போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட எஸ்பி தீபாகனிக்கர், நேற்று மேட்டூருக்கு வந்தார். அங்கு போலீசாருடன் கலந்தாலோசனை நடத்தி, பின்னர் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, குற்றவாளியை விரைவில் பிடிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: