×

திருச்சி முகாம் சிறையில் 7வது நாளாக இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி, ஜூலை 12: திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் நேற்று 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 34 பேர், வங்காள தேசத்தினர் 15 பேர், நைஜீரியாவை சேர்ந்த 4 பேர், தென் ஆப்பிரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த தலா ஒருவர் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர்கள் கள்ளத்தோணியில் தப்பிச்செல்ல முயற்சித்தல், போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களான யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. ஆனாலும் இவர்கள் விடுவிக்கப்படவில்லை. எனவே தங்களை விடுவிக்கக்கோரி 3 பேரும் முகாம் சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினர். 7வது நாளாக நேற்று இவர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா