நாங்குநேரி, ஜூலை 12: மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் அதிகாரிகளின் கவனக்குறைவால் சீரற்ற குடிநீர் வினியோகம் நடந்து வருவதால் பல இடங்களில் குடிநீரின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் உள்ள சின்ன மூலைக்கரை, நகல்குளம், சொக்கலிங்கபுரம், சங்கர்நகர், பெருமாள் நகர், லெத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.குடிநீர் வினியோகத்தில் பேரூராட்சி அதிகாரிகள் சரியான கவனம் செலுத்துவதில்லை எனவும் அதனால் பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.