சுரண்டை, ஜூலை 12: சேர்ந்தமரம் அருகே தன்னூத்தை சேர்ந்தவர் முருகன் (46), கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி (40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற முருகேஸ்வரி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மாயமான முருகேஸ்வரியை தேடி வருகின்றனர்.