கடையம், ஜூலை 12: கடையம் காவல் நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த அரசு பஸ்சால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.வைகுண்டம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ், நேற்று மாலை 4.30 மணியளவில் அம்பையில் இருந்து தென்காசிக்கு புறப்பட்டது. பஸ்சை வீரவநல்லூரை சேர்ந்த கணேசன் (42) ஓட்டி வந்தார். மகிழ்வண்ணநாதபுரம் வேல்மயில் (49), நடத்துநராக இருந்தார். மாலை 5 மணியளவில் கடையம் அடுத்த முதலியார்பட்டிக்கு பஸ் வந்தபோது ரயில்வே கேட் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்றிருந்த மக்கள் பஸ்சை மறித்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், டிரைவர் கணேசனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.