மருதகுளத்தில் விழிப்புணர்வு முகாம்

நெல்லை, ஜூலை 12:  மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் தூய்மை பாரத விழிப்புணர்வு முகாம் நடந்தது. மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மருதகுளம் ேராசலின் ெசல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முகமது பைசல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சியாளர் சங்கர சுப்பிரமணியம், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் ஊராட்சி செயலர் எபராய்ம் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 750 மாணவ, மாணவிகள் பங்கேற்ற தூய்மை இந்தியா பேரணி நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எடிசன், ஆசிரியர்கள் தர்மான் தங்கராஜ், ஏர்னஸ்ட் பாலையா ஆகியோர் கலந்து கொண்டனர். மருதகுளம் அங்கன்வாடி மையத்தில்  சுகாதார இந்தியா என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முத்துவேல், மற்றும் பிரின்ஸ் செய்திருந்தனர்.

Related Stories: