ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தென்காசி, ஜூலை 12:  ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் சங்கத்தின் 2019-20ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. குத்துக்கல்வலசை  எஸ்ஆர்ஆர் மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் குற்றாலம் எலைட் கிளப்பின் 3வது தலைவராக மேஜர் டோனர் மும்பை முருகேசன் தலைவராகவும், செயலாளராக  ஜெகன்மோகன், பொருளாளராக முன்னாள் உதவி ஆளுநர் மாரிமுத்து  பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன், முன்னாள் உதவி  ஆளுநர் மாடசாமிஜோதிடர், துணை ஆளுநர் ரமேஷ்பாபு ஆகியோர் சிறப்பு  விருந்தினராக பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு,  ஓட்டுநர் சண்முகம், கிராம உதவியாளர் முருகேசன், போஸ்ட்மேன் சிவராமகிருஷ்ணன்  ஆகியோருக்கு விருதுகளும், தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு தையல்மிஷினும்  வழங்கினர். விழாவில் பட்டய தலைவர் கனகசபை, முன்னாள் தலைவர் பூக்கடை  ராமகிருஷ்ணன், பொருளாளர் பழனியப்பன், ரொட்டேரியன்கள் அழகராஜா, ஆவுடையப்பன்,  சந்தானம், நந்து என்ற அருணாசலம், செண்பகஅருணாசலம், உதுமான் மைதீன்,  முகைதீன், பிரகாஷ், ராமசுப்பிரமணியன், காந்திமதிநாதன், செல்வநாயகம்சம்சு,  டாக்டர் மாரிமுத்து, முன்னாள் தலைவர்கள் சந்திரன், சுரேஷ், ஜித்தன்ரமேஷ்,  விஸ்வாசுல்தான், மாரியப்பன், கோவிந்தராஜூலு, காஜாமைதீன், பொன்ராஜ்,  வேல்சாமி, செல்வகணபதி, 2019-20 மற்ற சங்க தலைவர்கள்  சரஸ்வதி, கணேசன்,  வக்கீல் கார்த்திக்குமார், மோதிலால், ஜீவா மற்றும் ஜெய்பாக்யா சட்டநாதன்,  குத்துக்கல்வலசை திருநகர் செயலர் நடராஜன், முருகேசன், சேனை தலைவர்  அபிவிருத்தி சங்க தலைவர் ஆறுமுகம், எலைட் கிளப் உறுப்பினர்கள் சுகுமாறன்,  ராஜாமணி, தேனாண்டாள் நாச்சியப்பன், மீனாட்சிசுந்தரம், வெங்கடாசலம்,  தேவநாராயணன், உலகநாதன், முனீஸ்வரன், வேலாயுதம் உட்பட அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள் கலந்து  கொண்டனர்.

Related Stories: