முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

செங்கோட்டை, ஜூலை 12:  முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் 4ம் ஆண்டு நினைவு தினம், நேற்று செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் அனுசரிக்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தூர்பாண்டியன். கடந்த 2015 ஜூலை 11ம் தேதி அமைச்சராக இருந்த போதே உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது 4ம் ஆண்டு நினைவு தினம், நேற்று செந்தூர்பாண்டியன் சொந்த ஊரான செங்கோட்டை - கற்குடியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது  தோட்டத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: