உடன்குடி, ஜூலை 12: மெஞ்ஞானபுரம் அடுத்த தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி தாய்விளையை சேர்ந்த ரமேஷ் என்பவரது தலைமையில் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் திரண்டு வந்து மெஞ்ஞானபுரம் - நாசரேத் சாலையில் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்துசென்ற தட்டார் மடம் இன்ஸ்பெக்டர் சிவசங்கர், மெஞ்ஞானபுரம் எஸ்ஐ அமலோற்பவம், திருப்பதி, நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர்.