அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணம் அடுத்த அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.   தலைமையாசிரியர் சாந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவிதா தர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னையன் முன்னிலை வகித்தனர். நிலவள வங்கி தலைவர் அறிவழகன் பங்கேற்று 220 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.

Related Stories: