கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணம் அடுத்த அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சாந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவிதா தர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னையன் முன்னிலை வகித்தனர். நிலவள வங்கி தலைவர் அறிவழகன் பங்கேற்று 220 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.