கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணத்தில் உள்ள 45 வார்டுகளில் 2 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கொள்ளிடம் ஆற்றிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைத்து வளையப்பேட்டையில் உள்ள ராட்ஷத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகராட்சியில் உள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் குடிதாங்கியில் இருந்து வரும் வளையப்பேட்டைக்கு வரும் குழாய், வளையப்பேட்டை அக்ரஹாரம் சாலையில் உடைந்ததால் சாலையில் குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் சென்று வீணாகி வருகிறது. இதுபோன்ற நிலையால் கும்பகோணம் பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் குடிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் உடைந்துள்ள குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.